சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வால்பாறையில் அ.தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

கோவை: வால்பாறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறைந்த முன்னால் முதல்வர் பெயரில் இயங்கி வரும் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணா பல்கலைக் கழகத்தோடு இணைப்பதாக சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரைப் புறக்கணித்து அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சென்னை வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் உள்பட அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.



அதற்கு கண்டனம் தெரிவித்து கைது செய்ததை விடுவிக்கக்கோரியும், ஆளும்கட்சியின் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடக்கோரி கோஷங்களும் எழுப்பினர்.



அதிமுக நகர துணை செயலாளர் பொன் கணேசன் தலைமையில், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெபராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆர்.ஆர்.பெருமாள், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நரசப்பன், நகர அம்மா பேரவை இணைச்செயலாளர், ஆர்.ஆர்.சசிக்குமார், நகர தகவல் தொழில்நுட்பச் செயலாளர் சண்முகம், ஆகியோர் முன்னிலையில் நகரக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...