அமெரிக்கத் தூதரக அதிகாரி இன்று இரவு கோவை வருகை: நாளை தொழில்துறையினருடன் கலந்துரையாடல்.!!!

கோவை: அமெரிக்கத் தூதரக அதிகாரி இன்று இரவு கோவை வந்து, நாளை தொழில்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.


கோவை: அமெரிக்கத் தூதரக அதிகாரி இன்று இரவு கோவை வந்து, நாளை தொழில்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டின் தூதரக அலுவலகத்தின் அதிகாரி இன்று இரவு கோவை வருகிறார். நாளை மதியம் கோவை தொழில் துறையினர் பங்கேற்கும் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கோவை அவினாசி ரோட்டில் அமைந்துள்ள இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவை கிளை, வளாகத்தில் இந்த சிறப்புக் கூட்டம் நடக்கிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரி கோவை தொழில் துறையினருடன் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் பங்கேற்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்தியத் தொழில் வர்த்தக சபை அலுவலகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தொழில்துறையினருடன் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடர்ந்து வேறு சில நிகழ்ச்சிகளிலும் அமெரிக்கத் தூதரக அதிகாரி பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரக அதிகாரி கோவை வருவதை முன்னிட்டு காவல்துறை தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...