வால்பாறை சேடல் அணைப்பகுதியில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்!

கோவை: வால்பாறையில் நேற்று சேடல் அணைப்பகுதியில் குளிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்ரீராம் என்பவரை 2-வது நாளாக வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் நேற்று சேடல் அணைப்பகுதியில் குளிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்ரீராம் என்பவரை 2-வது நாளாக வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு அணை நிரம்பி தண்ணீர் தமிழகத்திற்குச் செல்வதற்காக அமைக்கப்பட்ட சேடல் அணை என்ற இடத்தில் கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஸ்ரீராம் என்பவர் அவரது நண்பர்களுடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளார்.



சோலையாறு அணைப் பகுதியைப் பார்த்து விட்டு சேடல் அணை என்ற பகுதியில் குளிக்கச் சென்று 5 பேரும் குளித்து விளையாடினர். ஸ்ரீராம் என்பவர் தண்ணீரில் குளிக்கும்பொழுது தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மூலம் ஸ்ரீராம் என்பவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி இன்று இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.

மேலும், தண்ணீர் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் தேடி வருகின்றனர்.



இந்த தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்குச் செல்வதால் வனப்பகுதியில் அடித்துச் சென்றிருக்கலாம் என்று தேடி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...