கோவை: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கிணத்துக்கடவில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கிணத்துக்கடவில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அனைவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இனைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழக இணைக்கும் தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் சிங், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மனோகரன், லட்சுமணன், நகரத் துணைச் செயலாளர் பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அனைவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இனைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழக இணைக்கும் தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் சிங், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மனோகரன், லட்சுமணன், நகரத் துணைச் செயலாளர் பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.