கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் தொகுப்புகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், சோலையாறு அணை 160 அடியை எட்டியது. பரம்பிக்குளம் அணை 70 அடியை எட்டியது. இதில், 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை நேற்றைய நிலவரப்படி 118.55 அடி உயரத்தை எட்டியிருந்தது.
இந்நிலையில், மழைப்பொழிவு காரணமாகவும், காடம்பாறை அணையில் மின் உற்பத்தி காரணமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1284 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 440 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர்.
மேலும், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மற்றும் ஆற்றுப்படுகை வழியாக விநாடிக்கு 625 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் தொகுப்புகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், சோலையாறு அணை 160 அடியை எட்டியது. பரம்பிக்குளம் அணை 70 அடியை எட்டியது. இதில், 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை நேற்றைய நிலவரப்படி 118.55 அடி உயரத்தை எட்டியிருந்தது.
இந்நிலையில், மழைப்பொழிவு காரணமாகவும், காடம்பாறை அணையில் மின் உற்பத்தி காரணமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1284 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 440 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர்.
மேலும், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மற்றும் ஆற்றுப்படுகை வழியாக விநாடிக்கு 625 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.