திருப்பூர்: உடுமலை வனச்சரக பகுதியில் இறந்த யானையின் ஒற்றை தந்தத்தை வெட்டி எடுத்த குற்றவாளியை பிடிக்க வனத்துறை சார்பில் சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
திருப்பூர்: உடுமலை வனச்சரக பகுதியில் இறந்த யானையின் ஒற்றை தந்தத்தை வெட்டி எடுத்த குற்றவாளியை பிடிக்க வனத்துறை சார்பில் சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம், கரட்டுர் சுற்று, சடையம்பாறை சரக வனப்பகுதியில் கடந்த 29.08.2021 அன்று, ஒற்றை தந்த ஆண் யானை (வயது சுமார் 35 மதிக்கத்தக்க ) இறந்தது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர் கணேஷ் அவர்கள், உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் அவர்கள், வனச்சரக அலுவலர் தனபால் அவர்கள், வனவர், வனகாப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அரசு வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் அவர்கள் மற்றும் கரட்டூர் கால் நடை மருத்துவர் அரவிந்த் அவர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்தை தணிக்கை செய்தனர்.
இந்நிலையில், தணிக்கை செய்த போது இறந்த யானையின் ஒற்றை தந்தம் காணாமல் போனது தெரியவந்தது.
இந்த நிலையில், நேற்று (30.08.2021) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவில் யானையின் தந்தமானது, யானையின் இறப்புக்கு பின் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உதவி வன பாதுகாவலர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடிப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம், கரட்டுர் சுற்று, சடையம்பாறை சரக வனப்பகுதியில் கடந்த 29.08.2021 அன்று, ஒற்றை தந்த ஆண் யானை (வயது சுமார் 35 மதிக்கத்தக்க ) இறந்தது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர் கணேஷ் அவர்கள், உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் அவர்கள், வனச்சரக அலுவலர் தனபால் அவர்கள், வனவர், வனகாப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அரசு வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் அவர்கள் மற்றும் கரட்டூர் கால் நடை மருத்துவர் அரவிந்த் அவர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்தை தணிக்கை செய்தனர்.
இந்நிலையில், தணிக்கை செய்த போது இறந்த யானையின் ஒற்றை தந்தம் காணாமல் போனது தெரியவந்தது.
இந்த நிலையில், நேற்று (30.08.2021) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவில் யானையின் தந்தமானது, யானையின் இறப்புக்கு பின் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உதவி வன பாதுகாவலர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடிப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.