கோவை: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 20-வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 20-வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இவர் பணிக்குச் செல்லும்போது, பேருந்து நிலையத்தில் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரைச் சந்தித்துள்ளார். இருவரும் தங்களது மொபைல் எண்களைப் பகிர்ந்து, அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பழநியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துள்ளனர். சிறுமியைக் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, கோட்டூர் காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமி அருப்புக்கோட்டையில் இருப்பது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட காவல்துறை பின்பு சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இவர் பணிக்குச் செல்லும்போது, பேருந்து நிலையத்தில் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரைச் சந்தித்துள்ளார். இருவரும் தங்களது மொபைல் எண்களைப் பகிர்ந்து, அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பழநியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துள்ளனர். சிறுமியைக் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, கோட்டூர் காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமி அருப்புக்கோட்டையில் இருப்பது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட காவல்துறை பின்பு சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.