கோவை: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்குக் கோவை திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா பாண்டிச்சேரியிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரானா தொற்று காரணமாக வால்பாறைக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர். தற்போது வால்பாறையில் சோலையார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான சின்னக்கல்லார் மற்றும் நீரார் அணைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆற்றில் 2000 கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மேலும் மழையின் காரணமாக திடீரென நீர் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நடு ஆற்றில் குளித்தும் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்தும் வருகின்றனர்.
உயிர்ப்பலி ஏற்படும் முன் நகராட்சி வருவாய்த்துறை காவல்துறை இணைந்து சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்குக் கோவை திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா பாண்டிச்சேரியிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரானா தொற்று காரணமாக வால்பாறைக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர். தற்போது வால்பாறையில் சோலையார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான சின்னக்கல்லார் மற்றும் நீரார் அணைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆற்றில் 2000 கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மேலும் மழையின் காரணமாக திடீரென நீர் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நடு ஆற்றில் குளித்தும் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்தும் வருகின்றனர்.
உயிர்ப்பலி ஏற்படும் முன் நகராட்சி வருவாய்த்துறை காவல்துறை இணைந்து சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.