கருணை கொண்ட உள்ளங்களால் கிடைத்தது நிதி உதவி: கோவை கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி 'SimpliCity' செய்தி எதிரொலி.!!

கோவை: கருணை கொண்ட உள்ளங்களால் கிடைத்தது நிதி உதவிக்கு கோவை கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



கோவை: கருணை கொண்ட உள்ளங்களால் கிடைத்தது நிதி உதவிக்கு கோவை கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நவீன் கூறியதாவது:

டென்னிஸ் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில், மத்திய பிரதேசத்தில் வரும் செப்டம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை தேசிய அளவிலான டென்னிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன.

இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் நான் இடம் பெற்றுள்ளேன். டென்னிஸ் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல ஸ்டிச் பால் கிரிக்கெட் போட்டியிலும் நான் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன்.

நிதி பற்றாக்குறை காரணமாக என்னால் மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக பங்கேற்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.

செப்டம்பர் 1 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் நாங்கள் இருக்க வேண்டும். இதற்காக ஆகஸ்ட் 31 காலை 6:00 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயிலில் நான் செல்ல வேண்டும்.

இதுகுறித்த செய்தி நேற்று 'சிம்ப்ளிசிட்டி' ஆன்லைன் செய்தி ஊடகத்தில் வெளியானது.

இதைத்தொடர்ந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ நா. கார்த்திக் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்தனர். இதன் காரணமாக எனக்கு மட்டுமல்ல எங்கள் அணியில் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சேர்த்து மொத்த ஸ்பான்ஸர் தொகையும் கிடைத்துள்ளது.

இதனால் எங்கள் அணியினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். தக்க நேரத்தில் நிதி உதவி அளித்து எங்களை ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நாங்கள் என்றென்றும் கடமை பட்டுள்ளோம்.

நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் நிலைமையை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற சிம்பிளிசிட்டி ஆன்லைன் ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்த நல் உள்ளங்களின் பெயர் மற்றும் அவர்கள் அளித்த நிதி உதவியின் விவரம்:

DMK, Ex, MLA Mr. N. Karthik- Rs 10,000

Mr. Sachin- Rs- 8,000

Mr. Selvaraj Rs-2,500

Mr. Vinoth Kumar- Rs- 3,000

Mr. Aarthi -Rs- 300

Mr. Roshith- Rs-100

Mr. Ramesh Kumar- Rs 2,000

Mr. Balasubramani- Rs -500

Mr. Giri - Rs- 2,000

Mr. Shivashankar- Rs-1,000

Mr.Salmaan - Rs- 500

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...