கோவையில் பாத்ரூமை சுத்தம் செய்த போது பரிதாபம்.!! தவறி தண்ணீர் பக்கெட்டில் விழுந்த 2-மாத குழந்தை பலி.!!

கோவை: கோவை அருகே தனது 2-மாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குழந்தை தவறி விழுந்து பரிதாப பலி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே தனது 2-மாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குழந்தை தவறி விழுந்து பரிதாப பலி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, பொள்ளாச்சி ரோடு மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகரைச் சேர்ந்தவர் விவேக் ராஜ். (29) சிவில் இன்ஜினியர். இவரது மனைவி நேற்று வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது 2-மாத பெண் குழந்தை ஸ்ரீ நீதா சிறுநீர் கழித்தது. இதைப் பார்த்த அவரது 3-வயது மூத்த மகள் அந்த குழந்தையை பாத்ரூமுக்கு தூக்கி சென்று சுத்தம் செய்ய முயன்றது.

அப்போது 2-மாத குழந்தை தவறி பக்கெட்டில் இருந்த தண்ணீருக்குள் விழுந்தது. இதைப் பார்த்த அவரது மனைவி ஓடிவந்து தண்ணீரிலிருந்த குழந்தையைத் தூக்கி சுந்தரா புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கொண்டு சென்றனர்.

வழியில் குழந்தை இறந்துவிட்டது இதுகுறித்து விவேக் ராஜ் செட்டி பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...