கோவை :கோவை பீளமேடு பகுதியில் இறந்தவா் பெயரில் மின் பெட்டியை இடமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் இறந்தவா் பெயரில் மின் பெட்டியை இடமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகர் வட்டம், பீளமேடு கிழக்குப் பிரிவு மின் அலுவலக பகுதியான துளசியம்மாள் லேஅவுட்டில் சரஸ்வதி என்பவர் பெயரில் வீட்டு மின் இணைப்பு இருந்து வந்தது.
இதன் மின் இணைப்புப் பெட்டியை, கிழக்குப் பிரிவு மின்வாரிய அலுவலர்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்தனர்.
இதில், சரஸ்வதி என்ற பயனாளி இறந்துவிட்ட நிலையில், அவரின் வாரிசுதாரா்கள் ஒப்புதலோடு விண்ணப்பம் பெற்று, மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்த பின்பு மின் பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், இறந்தவர் பெயரிலேயே விண்ணப்பம் பெற்று மின் பெட்டியை இடமாற்றம் செய்துள்ளனர். இது மின் வாரிய ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது. இவ்வாறு, இறந்தவர் பெயரில் விண்ணப்பம் பெற்று மின் பெட்டி இடமாற்றம் செய்த சம்பந்தப்பட்ட மின் அலுவலர்கள் மீது தலைமைப் பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சமீபத்தில் கோவை நகர் கோட்டத்துக்கு உள்பட்ட பீளமேடு நகரம், கிழக்குப் பிரிவு தண்ணீர்ப் பந்தல், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்குத் தெரிந்தே விதிமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகர் வட்டம், பீளமேடு கிழக்குப் பிரிவு மின் அலுவலக பகுதியான துளசியம்மாள் லேஅவுட்டில் சரஸ்வதி என்பவர் பெயரில் வீட்டு மின் இணைப்பு இருந்து வந்தது.
இதன் மின் இணைப்புப் பெட்டியை, கிழக்குப் பிரிவு மின்வாரிய அலுவலர்கள் கடந்த வாரம் இடமாற்றம் செய்தனர்.
இதில், சரஸ்வதி என்ற பயனாளி இறந்துவிட்ட நிலையில், அவரின் வாரிசுதாரா்கள் ஒப்புதலோடு விண்ணப்பம் பெற்று, மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்த பின்பு மின் பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், இறந்தவர் பெயரிலேயே விண்ணப்பம் பெற்று மின் பெட்டியை இடமாற்றம் செய்துள்ளனர். இது மின் வாரிய ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது. இவ்வாறு, இறந்தவர் பெயரில் விண்ணப்பம் பெற்று மின் பெட்டி இடமாற்றம் செய்த சம்பந்தப்பட்ட மின் அலுவலர்கள் மீது தலைமைப் பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சமீபத்தில் கோவை நகர் கோட்டத்துக்கு உள்பட்ட பீளமேடு நகரம், கிழக்குப் பிரிவு தண்ணீர்ப் பந்தல், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்குத் தெரிந்தே விதிமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.