திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த தாசில்தாரிடம் ஒரு வாரத்திற்கு முன் அனுமதி பெறவேண்டும்-மாவட்ட ஆட்சியர் சமீரன்.!!!

கோவை: திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த தாசில்தாரிடம் ஒரு வாரத்திற்கு முன் அனுமதி பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த தாசில்தாரிடம் ஒரு வாரத்திற்கு முன் அனுமதி பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்படக் கோவையில் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அந்தந்த பகுதி தாசில்தார்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை, திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவோர், ஒரு வாரம் முன் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டியது, பொதுமக்களின் கடமை. மண்டபங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமணம், இதர நிகழ்ச்சி நடத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...