கோவை: வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு பெண்குழந்தை மட்டுமே இருந்தால் 50 ஆயிரம் ரூபாயும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாயும், 18 வயது பூர்த்தியடைந்த பின் முதிர்வு தொகையோடு வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முறையாக விண்ணப்பித்து அசல் வைப்பு நிதி பத்திரம் வைத்துள்ள பயனாளிகள் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு வழங்கியுள்ள அசல் பத்திரம், பயனாளியின் போட்டோ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பயனாளி பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்பித்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அதற்கான நிதியும் சம்பந்தப்பட்ட துறைக்கு தற்போது அரசிடமிருந்து வந்துள்ள நிலையில், முதிர்வு தொகை பெறாமல் இருந்து வருகின்றனர்.
எனவே, வால்பாறை வட்டாரத்தில் உள்ள பயனாளிகள் அனைவரும் 94424 85301 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு பெண்குழந்தை மட்டுமே இருந்தால் 50 ஆயிரம் ரூபாயும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாயும், 18 வயது பூர்த்தியடைந்த பின் முதிர்வு தொகையோடு வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முறையாக விண்ணப்பித்து அசல் வைப்பு நிதி பத்திரம் வைத்துள்ள பயனாளிகள் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு வழங்கியுள்ள அசல் பத்திரம், பயனாளியின் போட்டோ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பயனாளி பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்பித்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அதற்கான நிதியும் சம்பந்தப்பட்ட துறைக்கு தற்போது அரசிடமிருந்து வந்துள்ள நிலையில், முதிர்வு தொகை பெறாமல் இருந்து வருகின்றனர்.
எனவே, வால்பாறை வட்டாரத்தில் உள்ள பயனாளிகள் அனைவரும் 94424 85301 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.