வால்பாறை அண்ணா நகரில் மண்சரிவு - பொதுமக்கள் அச்சம்!

கோவை: வால்பாறை அண்ணா நகரில் மண்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை அண்ணா நகரில் மண்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை பகுதியிலுள்ள அண்ணா நகர் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள கட்டிடம் தொடர்மழையால் இன்று திடீரென சரிந்து விழுந்து அருகே உள்ள குடியிருப்புப்பகுதி கூரைகளிலும், வீடுகளிலும் விழுந்தது. இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், அவ்வழியாக யாரும் செல்லமுடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மறுசீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...