கோவை: கோவை வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் செப்டம்பர் 10ம் தேதி வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 12ம் தேதி நடைபெற இருக்கும் விசர்ஜன ஊர்வலம் பற்றிய ஆலோசனைக்கூட்டம் வால்பாறையிலுள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் இந்து முன்னணி நகரப் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் நகரத் தலைவர் சதீஷ், ஒன்றிய தலைவர் யு.ஜெயன், ஒன்றிய பொதுச்செயலாளர் சி.வி.ரவீந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குக் கோவை கோட்ட செயலாளர் டி.பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 101 சிலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முறையாக பிரதிஷ்டை செய்வதெனவும், 12ம் தேதி நடைபெற இருக்கின்ற விசர்ஜன ஊர்வலத்தில் கொரோனா காலத்தைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்புடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி விழாவை சிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாட்களிலிருந்து விசர்ஜன ஊர்வலம் முடியும் வரை காவல் துறையினரின் ஆலோசனைக்கு இணங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணியின் முடீஸ் நகர செயலாளர் பிரஸ் பாலன், ஒன்றிய செயலாளர் வெற்றி வேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் கூட்டமுடிவில் நகர துணைத் தலைவர் எஸ்.ஆனந்த் நன்றி கூறினார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் செப்டம்பர் 10ம் தேதி வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 12ம் தேதி நடைபெற இருக்கும் விசர்ஜன ஊர்வலம் பற்றிய ஆலோசனைக்கூட்டம் வால்பாறையிலுள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் இந்து முன்னணி நகரப் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் நகரத் தலைவர் சதீஷ், ஒன்றிய தலைவர் யு.ஜெயன், ஒன்றிய பொதுச்செயலாளர் சி.வி.ரவீந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குக் கோவை கோட்ட செயலாளர் டி.பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 101 சிலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முறையாக பிரதிஷ்டை செய்வதெனவும், 12ம் தேதி நடைபெற இருக்கின்ற விசர்ஜன ஊர்வலத்தில் கொரோனா காலத்தைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்புடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி விழாவை சிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாட்களிலிருந்து விசர்ஜன ஊர்வலம் முடியும் வரை காவல் துறையினரின் ஆலோசனைக்கு இணங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணியின் முடீஸ் நகர செயலாளர் பிரஸ் பாலன், ஒன்றிய செயலாளர் வெற்றி வேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் கூட்டமுடிவில் நகர துணைத் தலைவர் எஸ்.ஆனந்த் நன்றி கூறினார்.