கோவை: கோவை கணபதி, மருதையா நகர் அருகே தனியார் தோட்டத்தில் இன்று மதியம் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாடு உயிரிழந்தது.
கோவை: கோவை கணபதி, மருதையா நகர் அருகே தனியார் தோட்டத்தில் இன்று மதியம் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மேய்ச்சலுக்காக விடப்பட்டபசுமாடு உயிரிழந்தது.
இதுகுறித்து, தோட்டத்து உரிமையாளர் சரவணகுமார் கூறுகையில், " எங்கள் தோட்டத்தில் வழக்கம்போல் இன்றுபசுமாடு மேய்ச்சலுக்கு விடப்பட்டது. வெகுநேரமாகியும் மாடு திரும்பாததால், நாங்கள் சென்று பார்த்தோம். அப்போது, மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு உயிரிழந்தது தெரியவந்தது.

விபத்து குறித்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் சரிவர பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு மின்வாரியம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மின்கம்பி அறுந்து விழுந்த இடம் தோட்டத்தின் வெளிப்புறத்தில் நாங்கள் பயன்படுத்தாத இடத்தில் அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த இடம் அருகே, காலை நேரத்தில் பலர் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தப்படும் இடமாகும். எனவே, காலையில் இந்த சம்பவம் நடந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியான பசுமாடு ஒரு மாதத்துக்கு முன்புதான் கன்று ஈன்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தோட்டத்து உரிமையாளர் சரவணகுமார் கூறுகையில், " எங்கள் தோட்டத்தில் வழக்கம்போல் இன்றுபசுமாடு மேய்ச்சலுக்கு விடப்பட்டது. வெகுநேரமாகியும் மாடு திரும்பாததால், நாங்கள் சென்று பார்த்தோம். அப்போது, மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு உயிரிழந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் சரிவர பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு மின்வாரியம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மின்கம்பி அறுந்து விழுந்த இடம் தோட்டத்தின் வெளிப்புறத்தில் நாங்கள் பயன்படுத்தாத இடத்தில் அமைந்துள்ளது.
சம்பவம் நடந்த இடம் அருகே, காலை நேரத்தில் பலர் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தப்படும் இடமாகும். எனவே, காலையில் இந்த சம்பவம் நடந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியான பசுமாடு ஒரு மாதத்துக்கு முன்புதான் கன்று ஈன்றது. இவ்வாறு அவர் கூறினார்.