உடுமலையில் குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர தயாராகி வரும் அமராவதி முதலைப்பண்ணை பூங்கா..!

கோவை: குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர உடுமலைப்பேட்டையில் அமராவதி முதலைப்பண்ணைப் பூங்கா தயாராகி வருகிறது.


கோவை:

உடுமலைப்பேட்டையில் குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர அமராவதி முதலைப்பண்ணைப் பூங்கா தயாராகி வருகிறது.



உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள அமராவதி அணை அருகே முதலைப்பண்ணை இயங்கிவருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட முதலைகள் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அமராவதி அணைக்கு சுற்றுலா வருபவர்கள் முதலைப் பண்ணைக்குச் சென்று முதலைகளை நேரில் கண்டு செல்வார்கள்.



இங்கு முதலைகள் மட்டும் உள்ளதால் நீண்ட நேரம் அவைகளை மட்டுமே கண்டு பொழுதைக் கழிக்க முடியாது.

எனவே, அந்தப் பகுதியை பூங்காவாக மாற்றி குழந்தைகள் விளையாடிச் செல்ல ஏராளமான விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் பூங்காவாக மாற்றி வனத்துறையினர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முதலை, மான், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளின் உருவம் கொண்ட விளையாட்டு உபகரணங்கள் ஏராளமாக நிறுவப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக செல்வார்கள் என்கின்றனர் வனத்துறையினர்.



இதனிடையே, தற்போது கொரோனா தொற்று காரணமாக பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவில்லை. அரசு தளர்வுகளை நீக்கிய பிறகு இந்த பூங்காவை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...