மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வடக்கு மண்டலத்தில் உள்ள அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அந்த குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, வடக்கு மண்டலம், வார்டு எண்- 44, நல்லாம்பாளையம் சாலை, அன்னையப்பன் வீதியில் பிரியா குடிநீர் சப்ளை நிறுவனம் குடிநீர் திருடுவதாக ராமசாமி நகர் 2 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் மனு அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் அப்பதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறைகேடாக அனுமதி பெறாமல் தண்ணீர் திருடிவருவது கண்டறியப்பட்டது.

மேலும், அந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் என்.சண்முகம் என்பவர் இரண்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டர் பொருத்தி தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது உறுதியானதையடுத்து, வீட்டு உபயோகத்திற்காக இணைப்பு பெற்று வணிக நோக்கில் பயன்படுத்தியதால் இரண்டு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சாலையின் குறுக்கே குழாய் பதித்து குடிநீர் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய குழாயும் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...