கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சொத்து பிரச்சனையால் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சொத்து பிரச்சனையால் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி லோகநாயகி (54).
இந்த நிலையில், நேற்று லோகநாயகி தனது கணவர் சின்னத்துரைக்கு அனுபவத்தில் உள்ள நிலத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வடக்கிபாளையம் அருகே உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன் புதூரைச் சேர்ந்த கதிர்வேல் ஆகிய இருவரும் லோகநாயகியை தேங்காய் பறிக்க கூடாது என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், இதுகுறித்து லோகநாயகி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் நாகூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன் புதூரைச் சேர்ந்த கதிர்வேல் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி லோகநாயகி (54).
இந்த நிலையில், நேற்று லோகநாயகி தனது கணவர் சின்னத்துரைக்கு அனுபவத்தில் உள்ள நிலத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வடக்கிபாளையம் அருகே உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன் புதூரைச் சேர்ந்த கதிர்வேல் ஆகிய இருவரும் லோகநாயகியை தேங்காய் பறிக்க கூடாது என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், இதுகுறித்து லோகநாயகி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் நாகூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, மாப்பிள்ளை கவுண்டன் புதூரைச் சேர்ந்த கதிர்வேல் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.