பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி குறைந்த எண்ணிக்கையை கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல்நிலைய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்த நிலையில் அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி கோவை அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

அதனடிப்படையில், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் முரளி, அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பார் ஊழியரான சுரேஷ் என்பவரை பிடித்ததுடன் அவரிடமிருந்து சுமார் 1400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் 192 மது பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். 

இந்நிலையில், 1200 மது பாட்டில்களை ஆய்வாளர் பதுக்கியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு புகார் வந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளிப்படவே அவரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒருவார காலமாக இது தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்காத பீளமேடு காவல்நிலைய உளவு பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...