பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் திறந்த வெளியில் குவிக்கப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம்... நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை.!!

கோவை: பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குப் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உடல்கூறு ஆய்வு கட்டிடம் அருகே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த ரத்தக்கசிவு படிந்த கழிவுகள், மற்றும் நோயாளிகளுக்குப் பயன்படுத்திய சிரஞ்சுகள், உடல்கூறு ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட கழிவுகள் அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆங்காங்கே மனிதக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி சுகாதார சீர்கேட்டின் புகலிடமாக இடமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு மேலும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...