கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டம் தொழிளலர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கியதை அடுத்து தொழிற்சங்கம் தலைவருக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டம் தொழிளலர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கியதை அடுத்து தொழிற்சங்கம் தலைவருக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத்தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து சமீபத்தில் தமிழக அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 பைசாவாக அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்மைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு முதல் டிவிசனை சார்ந்த தி.மு.க வார்டு செயலாளர் பால் பாண்டி தலைமையில், முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எல்.பி.எப்.தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசனை அலுவலகத்தில் சந்தித்து அவருக்குச் சால்வை அணிவித்து மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வடைக்கடை குட்டி என்ற தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத்தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து சமீபத்தில் தமிழக அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 பைசாவாக அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்மைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு முதல் டிவிசனை சார்ந்த தி.மு.க வார்டு செயலாளர் பால் பாண்டி தலைமையில், முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எல்.பி.எப்.தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசனை அலுவலகத்தில் சந்தித்து அவருக்குச் சால்வை அணிவித்து மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வடைக்கடை குட்டி என்ற தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.