வால்பாறை: வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை: வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறைக்குக் கொரானா தொற்று காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசால் சில கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக வால்பாறைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப் பட்டு வருகிறது. வால்பாறைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் முககவசம் அணியாமலேயே வருகின்றனர்.
இதனால் வால்பாறை பகுதியில் கொரானா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உத்தரவின் பேரில் சாலையில் நடந்து செல்பவர்களை முகக் கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தியும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி பயணிகளிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வற்புறுத்தி வருகின்றனர்.

மீறுவோருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையில் காவல் துறையினர் வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறைக்குக் கொரானா தொற்று காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசால் சில கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக வால்பாறைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப் பட்டு வருகிறது. வால்பாறைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் முககவசம் அணியாமலேயே வருகின்றனர்.
இதனால் வால்பாறை பகுதியில் கொரானா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உத்தரவின் பேரில் சாலையில் நடந்து செல்பவர்களை முகக் கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தியும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி பயணிகளிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வற்புறுத்தி வருகின்றனர்.
மீறுவோருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையில் காவல் துறையினர் வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கு பெற்றுள்ளனர்.