கோவையில் அ.தி.மு.க., பிரமுகரின் பினாமி என்று கூறி பெண்ணை மிரட்டியவர் கைது.!!

கோவை: கோவையில் வடவள்ளி சந்திரசேகரின் பினாமி என்று கூறி பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் வடவள்ளி சந்திரசேகரின் பினாமி என்று கூறி பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சாண்டி வில்லியம்ஸ் என்பவரின் மனைவி பிங்கி (40 ).இவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகில் பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித் தடத்தை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஹாலோபிளாக் சுந்தரம் என்பவர் மறித்து கட்டுமான பணிகள் செய்ய முயற்சி செய்தார்.

மேலும் அங்கிருந்த பைப்புகளை அடித்து உடைத்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பிங்கியின் கணவர் சாண்டி வில்லியம் வடவள்ளி காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது ஹாலோ பிளாக் சுந்தரம் இனிமேல் இடையூறு செய்ய மாட்டேன் என்று கூறி உறுதியளித்ததைத் தொடர்ந்து புகார் மனுவை திரும்பப்பெற்றனர்.

இந்நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களாக ஹாலோ பிளாக் சுந்தரம், பின்கி மற்றும் அவரது குடும்பத்தார் இடையே தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பிங்கியின் கணவர் சாண்டி வில்லியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இடத்தை பார்வையிடுவதற்கு நீதிமன்ற ஆணையர் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது. அந்த சமயத்தில் நான்கு அடியாட்களுடன் அங்கு வந்த ஹாலோ பிளாக் சுந்தரம் நான் யார் என்று தெரியுமா? வடவள்ளி சந்திரசேகரின் பினாமி என்று மிரட்டி தகராற்றில் ஈடுபட்டார்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன பிங்கி உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்குத் தொடர்பு கொண்டார்.

தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசைக் கண்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, தப்பிச் சென்ற நபர்களை வடவள்ளி காவல்துறை தேடி வந்தனர். பின்னர் நேற்று மாலை வடவள்ளி பகுதியில் பதுங்கியிருந்த ஹாலோபிளாக் சுந்தரத்தை வடவள்ளி காவல்துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...