வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய உணவு கடத்தல் பிரிவு ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர் கைது

கோவை: கோவை கீரநத்தம் பகுதியில் உள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ராஜ்குமார் ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



கோவை: கோவை கீரநத்தம் பகுதியில் உள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ராஜ்குமார் ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு, உடந்தையாக இருந்த எஸ்.ஐ இருளப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டார். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஐயப்பன் ன்பவர், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ஆயிலை வாங்கி கட்டிட பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், கோவை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் தலைமை காவலர் ராஜ்குமார் மேற்கண்ட வியாபாரியை அணுகி மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்தை லஞ்சமாக தர வேண்டும் இல்லாவிட்டால் கைது செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து, ஐயப்பன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் 2 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை கீரணத்தம் பகுதியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த தலைமை காவலர் ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது பணத்தை வாங்கிய போது, மறைந்திருந்து கண்காணித்த கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ராஜ்குமாரை கையும்களவுமாக பிடித்தனர். பின்னர், அவரது அலுவலகத்திலும் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதனிடையே, தலைமை காவலருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக எஸ்.ஐ இருளப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.



இவர்கள் இருவரையும் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், பிறகு இன்று மதியம் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...