கோவை: கோவை உழவர் சந்தையில் காய்கறி வாங்கி, விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்' என்று மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: கோவை உழவர் சந்தையில் காய்கறி வாங்கி, விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்' என்று மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன.இங்கு விவசாயிகளின் வருகை மற்றும் காய்கறி விற்பனையை ஊக்குவிக்க, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அவற்றின் சார்பு நிறுவனங்கள், அவற்றின் சார்பு உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், உழவர் சந்தைகளில் காய்கறி வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் கீரைகள், காய்கறிகளை நேரடியாக வாங்குவதன் மூலம் விவசாயிகள், நுகர்வோர் என, இரு தரப்பினருக்கும் பயன் கிடைக்கும்.
உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், அந்தந்த உழவர் சந்தையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன.இங்கு விவசாயிகளின் வருகை மற்றும் காய்கறி விற்பனையை ஊக்குவிக்க, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அவற்றின் சார்பு நிறுவனங்கள், அவற்றின் சார்பு உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், உழவர் சந்தைகளில் காய்கறி வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் கீரைகள், காய்கறிகளை நேரடியாக வாங்குவதன் மூலம் விவசாயிகள், நுகர்வோர் என, இரு தரப்பினருக்கும் பயன் கிடைக்கும்.
உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், அந்தந்த உழவர் சந்தையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.