கோவை: நெகமம் - வடசித்தூர் ரோட்டில் பெண்ணிடம் இருந்து 2-சவரன் நகை பறித்து சென்றதால் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: நெகமம் - வடசித்தூர் ரோட்டில் பெண்ணிடம் இருந்து 2-சவரன் நகை பறித்து சென்றதால் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, இவரது மனைவி ஆனந்தி(54), இவர் கோவையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், நெகமம் வடசித்தூர் அருகே இவருக்குச் சொந்தமான இடத்தை பார்வையிட்டு விட்டு பின்னர், இரவு இருசக்கர வாகனத்தில் வட சித்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆனந்தியின் கழுத்திலிருந்த 2-சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டுத் தப்பினர்.
இது தொடர்பாக நேற்று நெகமம் போலீசில் ஆனந்தி புகார் கொடுத்ததின் பேரில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, இவரது மனைவி ஆனந்தி(54), இவர் கோவையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், நெகமம் வடசித்தூர் அருகே இவருக்குச் சொந்தமான இடத்தை பார்வையிட்டு விட்டு பின்னர், இரவு இருசக்கர வாகனத்தில் வட சித்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆனந்தியின் கழுத்திலிருந்த 2-சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டுத் தப்பினர்.
இது தொடர்பாக நேற்று நெகமம் போலீசில் ஆனந்தி புகார் கொடுத்ததின் பேரில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.