கோவை: இலவச வீட்டு மனை பட்டா கோரி கொங்குநாட்டான் புதூர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை: இலவச வீட்டு மனை பட்டா கோரி கொங்குநாட்டான் புதூர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கொங்குநாட்டான்புதூர் கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் எனக்கோரி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், அவர்களிடம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானம் தேவ் ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்ட இன்றி தவித்து வரும் பொதுமக்களுக்கு அரசு இடம் வழங்கி வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்த சார் ஆட்சியர், கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.