கோவை: 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் ராஜ்கோட் வரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
கோவை: 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் ராஜ்கோட் வரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகக் கன்னியாகுமரி முதல் ராஜ் கோட் வரை மத்திய ரிசர்வ் காவல்துறை படை சார்பில் 15-வீரர்கள் சுமார் 2500-கிலோமீட்டர் சைக்கிள் பேரணி கடந்த 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி ராஜ் கோட்டில் அக்டோபர் 2ம்-தேதி முடிவடைய உள்ளது.

இந்நிலையில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, திண்டுக்கல் வழியாக சுமார் 450-கிலோ மீட்டர் கடந்து மாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் ஜெய் ஸ்ரீராம் கல்லூரிக்கு வந்தடைந்தது.

இந்நிலையில், சைக்கிள் பேரணிக்குப் பொதுமக்கள் மற்றும் கலைத்துறை, விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறையினர் என ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக வீரர்களை வரவேற்கும் விதமாக கேக் வெட்டியும், நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பின்னர் ஐ.எம்.ஜி.கே.ஏ கராத்தே அமைப்பு சார்பில் தற்காப்பு செயல்முறை விளக்கம், கும்மியாட்டம், சிலம்பாட்டம் எனக் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் காவல்துறை கமாண்டர் எம்.டி. பயாஸ், மற்றும் ஆய்வாளர் ஐயப்பன், பல்லடம் துணை கண்காணிப்பாளர் வெற்றி செல்வன், காட்டூர் பஞ்சாயத்துத் தலைவர் கோபால் மற்றும் கே.எஸ்.கே. பவுண்டேஷன் நிறுவனர் சம்பத்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகக் கன்னியாகுமரி முதல் ராஜ் கோட் வரை மத்திய ரிசர்வ் காவல்துறை படை சார்பில் 15-வீரர்கள் சுமார் 2500-கிலோமீட்டர் சைக்கிள் பேரணி கடந்த 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி ராஜ் கோட்டில் அக்டோபர் 2ம்-தேதி முடிவடைய உள்ளது.
இந்நிலையில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, திண்டுக்கல் வழியாக சுமார் 450-கிலோ மீட்டர் கடந்து மாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் ஜெய் ஸ்ரீராம் கல்லூரிக்கு வந்தடைந்தது.
இந்நிலையில், சைக்கிள் பேரணிக்குப் பொதுமக்கள் மற்றும் கலைத்துறை, விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறையினர் என ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக வீரர்களை வரவேற்கும் விதமாக கேக் வெட்டியும், நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பின்னர் ஐ.எம்.ஜி.கே.ஏ கராத்தே அமைப்பு சார்பில் தற்காப்பு செயல்முறை விளக்கம், கும்மியாட்டம், சிலம்பாட்டம் எனக் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் காவல்துறை கமாண்டர் எம்.டி. பயாஸ், மற்றும் ஆய்வாளர் ஐயப்பன், பல்லடம் துணை கண்காணிப்பாளர் வெற்றி செல்வன், காட்டூர் பஞ்சாயத்துத் தலைவர் கோபால் மற்றும் கே.எஸ்.கே. பவுண்டேஷன் நிறுவனர் சம்பத்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.