தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் 230 கிலோ பறிமுதல். 2 பேர் கைது.
கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் 230 கிலோ பறிமுதல். 2 பேர் கைது.
கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புகையிலை பொருட்களையும், செல்போன், பைக் உட்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.
அப்போது, அவர்களிடமிருந்து 230 கிலோ1,333 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், பிடிபட்டவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 800, மற்றும் 3 செல்போன்கள், யமஹா பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள், கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் 26, மற்றும் ஒண்டிப்புதூர், சிந்துநகரை சேர்ந்த ஆல்வின் 29, என்பதும் தெரியவந்துள்ளது.
கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புகையிலை பொருட்களையும், செல்போன், பைக் உட்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.
அப்போது, அவர்களிடமிருந்து 230 கிலோ1,333 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், பிடிபட்டவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 800, மற்றும் 3 செல்போன்கள், யமஹா பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள், கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் 26, மற்றும் ஒண்டிப்புதூர், சிந்துநகரை சேர்ந்த ஆல்வின் 29, என்பதும் தெரியவந்துள்ளது.