மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சிக்குட்பட்ட மறுசுழற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மற்றும் மக்கும் குப்பைகளை  அந்தந்த நிறுவனங்களே சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்காத குப்கைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், கோவை மாநகராட்சி மற்றும் தூய்மை பாரத இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் அனைத்து குடியிருப்புகள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறக் கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தளங்கள், விளையாட்டு மைதானங்கள், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் சந்தை சார்ந்த சங்கங்கள் சேகரம் செய்ய வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

மேலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் மேற்கண்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மேலும், மக்கும் குப்பைகளை அந்தந்த நிறுவனங்களே தமது சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை 2017 மார்ச் 31ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும். 

மேற்படி பணிகளை மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப உதவிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கோவை மாநகராட்சியை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...