கோவை: கோவையில் இன்று மாலை ரோட்டரி கிளப்பின் புதிய கிளை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் துவக்க விழா நடைபெற்றது.
கோவை: கோவையில் இன்று மாலை ரோட்டரி கிளப்பின் புதிய கிளை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் துவக்க விழா நடைபெற்றது.
இந்த துவக்க விழா கோவை காந்திபுரம் ஹரி டெஜன் நட்சத்திர ஓட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி கவர்னர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப்பின் முக்கிய நிர்வாகிகள் சி.ஜி.குமார், தியாகராஜன், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரயன் மணி மற்றும் சித்ரா நன்றியுரை வழங்கினார்.
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் துவக்க விழாவில் ரோட்டரியன் நாக சந்தோஷ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். செயலாளராக ரோட்டர யன் மணிராஜ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் சார்பாக வரும் காலங்களில் எவ்வாறு செயல்படுவது மக்களுக்கு தேவையான உதவிகளை சமூக சேவைகளை தொடர்ந்து செய்வது, சுகாதாரம் சம்பந்தமான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புற மக்களை சென்று சந்தித்து அவர்களுக்கு வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அவர்களை உற்சாகப் படுத்துவது என இந்த ஆண்டு ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் நீயூஜென் சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தனர்.

இதில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் குடும்பத்தார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி கிளப்பிலேயே தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த ரோட்டரி கிளப் மட்டுமே இளைஞர்கள் நிறைந்ததாக கூறப்படுகிறது.