சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாடு தொடர்பாக சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் கோவையில் துவக்கம்!


சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் இன்று முதல் கோவையில் தொடங்கியுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையத்தின் செயல் அலுவலர் ரவி நாயுடு மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், உலக நாடுகள் முழுவதும் 1 லட்சத்து 44 ஆயிரம் வேதிப்பொருட்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வேதிப்பொருள்களின் மூலம் ஏற்படும் பாதிப்பின் காரணமாக 4 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும், பலருக்கு புற்றுநோய்களும் ஏற்பட்டுவருகின்றது.

இதிலிருந்து காப்பாற்றுவதற்காக உலக பாதுகாப்பு என்ற அமைப்பின் மூலம் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்கான அறிவியல் தொழில் நுட்பத்தினை தெரிந்து கொள்ளவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையம் மற்றும் நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து மாசுபட்ட இடங்களை மீட்டெடுப்பதற்கான சர்வதேச கருத்தரங்கினை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

கோவையில் இன்று முதல் துவங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறு நியுசிலாந்து, அமெரிக்கா, போன்ற 12 நாடுகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் 18 பேராசிரியர்கள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களின் மூலம்சு ற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளனர். இந்தியாவின் சார்பில் 359 ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் பெறப்படும் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர்கள் மாசு மதிப்பிடல் மற்றும் மீட்டெடுத்தலுக்கான மையம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுவரை புதிய தொழில்நுட்பம், மென்பொருள் பொறியாளர்கள், இளைஞர்களை வைத்து 5 சதவீதம் மாசினை சுத்தப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...