சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாடு தொடர்பாக சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் கோவையில் துவக்கம்!


சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் இன்று முதல் கோவையில் தொடங்கியுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையத்தின் செயல் அலுவலர் ரவி நாயுடு மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், உலக நாடுகள் முழுவதும் 1 லட்சத்து 44 ஆயிரம் வேதிப்பொருட்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வேதிப்பொருள்களின் மூலம் ஏற்படும் பாதிப்பின் காரணமாக 4 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும், பலருக்கு புற்றுநோய்களும் ஏற்பட்டுவருகின்றது.

இதிலிருந்து காப்பாற்றுவதற்காக உலக பாதுகாப்பு என்ற அமைப்பின் மூலம் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்கான அறிவியல் தொழில் நுட்பத்தினை தெரிந்து கொள்ளவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையம் மற்றும் நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து மாசுபட்ட இடங்களை மீட்டெடுப்பதற்கான சர்வதேச கருத்தரங்கினை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

கோவையில் இன்று முதல் துவங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறு நியுசிலாந்து, அமெரிக்கா, போன்ற 12 நாடுகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் 18 பேராசிரியர்கள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களின் மூலம்சு ற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளனர். இந்தியாவின் சார்பில் 359 ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் பெறப்படும் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர்கள் மாசு மதிப்பிடல் மற்றும் மீட்டெடுத்தலுக்கான மையம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுவரை புதிய தொழில்நுட்பம், மென்பொருள் பொறியாளர்கள், இளைஞர்களை வைத்து 5 சதவீதம் மாசினை சுத்தப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...