கோவை: பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருடி விற்பனை செய்வதாகவும், முறைகேடாகத் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருடி விற்பனை செய்வதாகவும், முறைகேடாகத் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ், திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் மூலம், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த, பிரதான கால்வாயில் பல்வேறு இடங்களில், தண்ணீர் திருட்டு நடப்பதாகப் புகார் எழுந்து வந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று கெடிமேடு அருகே வாய்க்கால் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பிரதான கால்வாயிலிருந்து முறைகேடாகக் குழாய் பதித்து, கிணறுகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து, லாரிகள் மூலம் தண்ணீரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பொள்ளாச்சி தெற்கு மண்டல துணை வட்டாட்சியர், கோலார்பட்டி நில வருவாய் ஆய்வாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் நடத்திய சோதனையின்போது, சுப்ரீம் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தின் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 லாரிகளிலும், 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய லாரி மற்றும் கண்ணன் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தின் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு லாரிகள் மூலமும் முறைகேடாகத் தண்ணீர் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
முறைகேடாகத் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது, எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு எச்சரித்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ், திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் மூலம், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த, பிரதான கால்வாயில் பல்வேறு இடங்களில், தண்ணீர் திருட்டு நடப்பதாகப் புகார் எழுந்து வந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று கெடிமேடு அருகே வாய்க்கால் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பிரதான கால்வாயிலிருந்து முறைகேடாகக் குழாய் பதித்து, கிணறுகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து, லாரிகள் மூலம் தண்ணீரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பொள்ளாச்சி தெற்கு மண்டல துணை வட்டாட்சியர், கோலார்பட்டி நில வருவாய் ஆய்வாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் நடத்திய சோதனையின்போது, சுப்ரீம் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தின் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 லாரிகளிலும், 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய லாரி மற்றும் கண்ணன் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தின் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு லாரிகள் மூலமும் முறைகேடாகத் தண்ணீர் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
முறைகேடாகத் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது, எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு எச்சரித்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.