கோவை: பொள்ளாச்சி அருகே இருவேறு பகுதிகளில், 2 பெண்கள் மாயமானது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே இருவேறு பகுதிகளில், 2 பெண்கள் மாயமானது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (36), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிய நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி தன் மனைவி காணாமல் போனதாக நாகராஜ் பொள்ளாச்சி மகாலிங்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்து காணாமல் போன கோமதியை தேடி வருகின்றனர்.
இதேபோல, பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கம் (52), இவரது மகள் ஜமுநேஸ்வரி (21) என்பவர் கடந்த 13ம் தேதி காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார் இவரை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (36), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி (33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிய நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி தன் மனைவி காணாமல் போனதாக நாகராஜ் பொள்ளாச்சி மகாலிங்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்து காணாமல் போன கோமதியை தேடி வருகின்றனர்.
இதேபோல, பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கம் (52), இவரது மகள் ஜமுநேஸ்வரி (21) என்பவர் கடந்த 13ம் தேதி காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார் இவரை தேடி வருகின்றனர்.