தொடர் மழையால் நிரம்பும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பரம்பிக்குளம் அணை.!! விவசாயிகள் மகிழ்ச்சி.!!

கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பரம்பிக்குளம் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பரம்பிக்குளம் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த மாதம் துவக்கத்திலிருந்தே பல நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பி.ஏ.பி திட்ட அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன் டாப்ஸ்லிப் அருகே மொத்தம் 72-அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது.

கடந்த வாரத்தில் விநாடிக்கு அதிகபட்சமாக 3-ஆயிரம் கன அடி வரையிலும் தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 65-அடியாக உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் போதிய மழை இல்லாமல் இருந்ததாலும் சோலையார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பால் பரம்பிக்குளம் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, அணைக்குத் தண்ணீர் வரத்து வினாடிக்கு ஆயிரத்து 1,900-கன அடியாக இருந்தது. இருப்பினும் திருமூர்த்தி அணை பாசன தேவைக்காக வினாடிக்குஆயிரம் கன அடி வீதம் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது.

தற்போது பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 68-அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4-அடியே தேவை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...