கோவை: கோவையில் ஆக்கிரமிப்பு வணிக கட்டிடங்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டனர்.
கோவை: கோவையில் ஆக்கிரமிப்பு வணிக கட்டிடங்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டனர்.
கோவை உப்பாரா வீதியில் பேட்டை விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 265 சதுர அடி நிலத்தில் ஆக்கிரமித்து வணிக கட்டிடம் இருந்தது.
இதேபோல், பெரிய லட்சுமி நாராயண வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான 1,060 சதுர அடி பரப்பில் இரண்டு வணிக கட்டிடங்களும் இருந்தன. இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கோவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கோவில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி, தெற்கு தாசில்தார் புனிதவதி, ஆகியோர் முன்னிலையில் பெரியகடைவீதி போலீசாரின் பாதுகாப்புடன் அங்கு விரைந்து சென்றனர். பின்னர், பொக்லைன் மூலமாக ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டன.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1.75 கோடி ஆகும். இது போன்று ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை உப்பாரா வீதியில் பேட்டை விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 265 சதுர அடி நிலத்தில் ஆக்கிரமித்து வணிக கட்டிடம் இருந்தது.
இதேபோல், பெரிய லட்சுமி நாராயண வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான 1,060 சதுர அடி பரப்பில் இரண்டு வணிக கட்டிடங்களும் இருந்தன. இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கோவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கோவில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி, தெற்கு தாசில்தார் புனிதவதி, ஆகியோர் முன்னிலையில் பெரியகடைவீதி போலீசாரின் பாதுகாப்புடன் அங்கு விரைந்து சென்றனர். பின்னர், பொக்லைன் மூலமாக ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டன.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1.75 கோடி ஆகும். இது போன்று ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.