உண்ணாவிரதத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசே பொறுப்பு-சமூக ஆர்வலர் போராட்டம்.!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தைத் துவக்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தைத் துவக்கினர்.

கொரானா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் முறைகேடாகக் குறிப்பிட்ட நேரத்திற்கு மீறி மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது போராட்டத்தைத் துவக்கினார்.



இந்த உண்ணாவிரதத்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்குத் தமிழக அரசே பொறுப்பு எனவும் விளம்பர பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...