கோவை: கோவை ஒண்டிபுதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து வரும் 20-ம் தேதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
கோவை: கோவை ஒண்டிபுதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து வரும் 20-ம் தேதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
கோவை ஒண்டிபுதூர் கழிவுநீரைச் சுத்திகரித்து அதை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்தைப் பார்வையிட திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களின் வேண்டுகோளை ஏற்றுச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யா நாதன் அவர்கள் வரும் 20ம் தேதி பார்வையிட உள்ளார்.
இது குறித்து திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் வெளிவரும் கழிவுநீரைச் சுத்திகரித்து அதை விவசாயத்திற்குப் பயன்படுத்த அரசின் அங்கீகாரமும், ஆதரவும் வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. சிவ.வீ.மெய்ய நாதன் அவர்களிடம் எடுத்துரைத்தோம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இது குறித்து முழுமையாகக் கேட்டறிந்த பின்னர் வரும் 20ம் தேதி நேரடியாக வந்து இத்திட்டத்தைப் பார்வையிடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதையடுத்து கோவையில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் ஓர் கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவும் அதில் பங்கேற்றுப் பேசத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த கலந்தாய்வுக் கூட்டத்தைக் கழக சுற்றுச்சூழல் அணி ஏற்பாடு செய்யும் எனவும் அவரிடம் உறுதி கொடுத்தேன்.
கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவது என்பது தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக முன்னெடுக்கும் முயற்சியாகும், அதை நம் கழக அரசு மேற்கொண்டு வருவது வரவேற்பிற்குரியது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஒண்டிபுதூர் கழிவுநீரைச் சுத்திகரித்து அதை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்தைப் பார்வையிட திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களின் வேண்டுகோளை ஏற்றுச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யா நாதன் அவர்கள் வரும் 20ம் தேதி பார்வையிட உள்ளார்.
இது குறித்து திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் வெளிவரும் கழிவுநீரைச் சுத்திகரித்து அதை விவசாயத்திற்குப் பயன்படுத்த அரசின் அங்கீகாரமும், ஆதரவும் வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. சிவ.வீ.மெய்ய நாதன் அவர்களிடம் எடுத்துரைத்தோம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இது குறித்து முழுமையாகக் கேட்டறிந்த பின்னர் வரும் 20ம் தேதி நேரடியாக வந்து இத்திட்டத்தைப் பார்வையிடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதையடுத்து கோவையில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் ஓர் கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவும் அதில் பங்கேற்றுப் பேசத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த கலந்தாய்வுக் கூட்டத்தைக் கழக சுற்றுச்சூழல் அணி ஏற்பாடு செய்யும் எனவும் அவரிடம் உறுதி கொடுத்தேன்.
கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவது என்பது தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக முன்னெடுக்கும் முயற்சியாகும், அதை நம் கழக அரசு மேற்கொண்டு வருவது வரவேற்பிற்குரியது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.