கோவை புறநகர் பகுதியில் 15-லட்சம் மதிப்பிலான 55-பவுன் நகைகள், 2-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.!!

கோவை: கோவை புறநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து பூட்டை உடைத்து நாள்தோறும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.


கோவை: கோவை புறநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து பூட்டை உடைத்து நாள்தோறும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதற்காக கோவை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமை காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று காலை 8-மணி அளவில் கோவில் பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் குரும்பபாளையம் காலப்பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த பஜாஜ் பல்சர் வாகனத்தில் நேம் பிளேட் இல்லாமல் இரண்டு வாலிபர்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அவர்களை பிடித்து சோதனை செய்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

தொடர்ந்து விசாரணையில் அவர்கள் கோவை கோவில்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

கீரணத்தம் பஞ்சாயத்து லட்சுமி கார்டன் ஐச் சேர்ந்த விஜயகுமார் 27-தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன் 32-என்பது தெரியவந்தது.



இவர்களை பிடித்து தொடர் விசாரணையில் 15-லட்சம் மதிப்பிலான 55-பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இவர்கள் இதுவரை 10-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும்.



கோவை கோவில்பாளையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளதாகவும் தெரிய வந்தது.

துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் பாராட்டினார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...