கோவை: கடந்த 16-மாதத்தில் கோவை மாவட்டத்தில் 5-கோடி 58-அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவை: கடந்த 16-மாதத்தில் கோவை மாவட்டத்தில் 5-கோடி 58-அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாபரவல் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அரசினுடைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16-மாதத்தில் கோவை மாவட்டத்தில் 5-கோடி 58-அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா விதி மீறல் தொடர்பாகப் பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து 16-மாதங்களில் ரூ.5.58-கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்று பரவியதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு ரூ.500-முதல் ரூ.2,000-வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத மக்கள் மற்றும் கடைகள், நிறுவனங்களிடம் இருந்து ரூ.5.58-கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகளுக்குச் சீல் வைக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 16-மாதங்களில் ரூ.5-கோடியே 58-லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்றார்.
கோவையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாபரவல் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அரசினுடைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16-மாதத்தில் கோவை மாவட்டத்தில் 5-கோடி 58-அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா விதி மீறல் தொடர்பாகப் பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து 16-மாதங்களில் ரூ.5.58-கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்று பரவியதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு ரூ.500-முதல் ரூ.2,000-வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத மக்கள் மற்றும் கடைகள், நிறுவனங்களிடம் இருந்து ரூ.5.58-கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகளுக்குச் சீல் வைக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 16-மாதங்களில் ரூ.5-கோடியே 58-லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்றார்.