திருப்பூர்: ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்டக் கோரி திருப்பூரில் சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் பெரியார் அண்ணா சிலைக்கு மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்டக் கோரி திருப்பூரில் சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் பெரியார் அண்ணா சிலைக்கு மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள அண்ணா பெரியார் சிலைக்குச் சமூகநீதி கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அதில் கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சி செய்த எந்தவொரு அரசும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிவரும் இட ஒதுக்கீடான 20 சதவீதத்துக்குள் உள் ஒதுக்கீடே செய்யாத நிலையில், முந்தைய அதிமுக அரசால் துரிதகதியில் இயற்றப்பட்டு, தற்போதைய திமுக அரசால் மீண்டும் ஆணையிடப்பட்டு கல்வித்துறை சேர்க்கையில் தற்போது சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வகுப்பு வாரி இட ஒதுக்கீடு என்பதைப் புறந்தள்ளி, ஜாதிவாரி இட ஒதுக்கீடு செய்திருப்பதும் அரசியலைப்பு சட்டத்துக்கு எதிரானதாக உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என, முறையீடு செய்து உள் ஒதுக்கீடு இல்லாத எம்பிசி 20 சதவீதத்தை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை தொடர வேண்டும் எனக் கோரி சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் அண்ணா சிலை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள அண்ணா பெரியார் சிலைக்குச் சமூகநீதி கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அதில் கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சி செய்த எந்தவொரு அரசும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிவரும் இட ஒதுக்கீடான 20 சதவீதத்துக்குள் உள் ஒதுக்கீடே செய்யாத நிலையில், முந்தைய அதிமுக அரசால் துரிதகதியில் இயற்றப்பட்டு, தற்போதைய திமுக அரசால் மீண்டும் ஆணையிடப்பட்டு கல்வித்துறை சேர்க்கையில் தற்போது சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வகுப்பு வாரி இட ஒதுக்கீடு என்பதைப் புறந்தள்ளி, ஜாதிவாரி இட ஒதுக்கீடு செய்திருப்பதும் அரசியலைப்பு சட்டத்துக்கு எதிரானதாக உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என, முறையீடு செய்து உள் ஒதுக்கீடு இல்லாத எம்பிசி 20 சதவீதத்தை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை தொடர வேண்டும் எனக் கோரி சமூக நீதி கூட்டமைப்பினர் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் அண்ணா சிலை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.