திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை. கணபதி 46 -வது வட்ட கழகத்தின் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவை: கோவை கணபதி 46 -வது வட்ட திமுக சார்பில், திமுக 100 நாள் சாதனை ஆட்சியை கொண்டாடும் விதமாக கட்சி கொடியேற்றி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


கோவை: கோவை கணபதி 46 -வது வட்ட திமுக சார்பில், திமுக 100 நாள் சாதனை ஆட்சியை கொண்டாடும் விதமாக கட்சி கொடியேற்றி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கோவையில், திமுகவினர் பல்வேறு கட்சி அலுவலக வாசலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்று 100 நாளில் சாதனை நிகழ்வை வாசலில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதன்படி, கோவை கணபதி பகுதி 46 -வது திமுக கழகம் சார்பில் கணபதி 3 -ம் நம்பர் பேருந்து நிலையம், கோபால்சாமி கோவில் பின்புறம் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வாசலில் 46 ஆவது வட்ட கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் தலைமை தாங்கி கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் சாந்தி பன்னீர்செல்வம் முன்னிலை வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேஷ், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ், பிரதிநிதி தனியேவேல், மாணவரணி தர்மா மற்றும் கட்சி நிர்வாகிகள், திமுக மகளிர் அணி, மாணவர் அணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, அங்கு கூடியிருந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு லட்டு, ஜிலேபி உட்பட இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி குறித்து கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் பேசியதாவது:-

சொல்வதை செய்யும் கட்சி தான் திமுக. இந்த நிலைபாடு தான் கலைஞருடைய தாரக மந்திரம். அதன் அடிப்படையில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து 100 நாள்களில் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதத்தில் பல்வேறு விதமான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

எனவே, இந்த 100 நாளில் நேற்று போடப்பட்ட பட்ஜெட்டில் எந்த விதமான வரி இல்லாத பட்ஜெட்டாக அறிவித்திருக்கிறார். அதனால், மக்கள் அனைவரும் ஸ்டாலினுடைய ஆட்சியை மக்கள் ஆட்சி என புகழ்ந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மத்திய அரசால் கூட குறைக்க முடியாத பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

இது அனைத்து அடித்தட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது தொடர்ந்து, பல்வேறு சாதனைகளை புரிந்து மக்கள் மனதில் தளபதி என்றும் வீற்றிருப்பார், என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...