கோவை: சோலையாறு அணை கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அதன் முழு கொள்ளளவான 160 தண்ணீர் நிரம்பி உள்ளது.
கோவை: சோலையாறு அணை கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அதன் முழு கொள்ளளவான 160 தண்ணீர் நிரம்பி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு 165 அடியை தொட்டது. அணையில் இருந்து தண்ணீர் தமிழக விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மழை குறைந்து வெயில் நிலவி வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வற்றி சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. சோலையாறு அணை தற்போது 160 அடியாக தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1154 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் இருப்பு 3290 கன அடியாக உள்ளது.

மேலும், அணையின் உயரம் 165 அடிக்கு தற்போதைய 160 அடி உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் 1,215 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் ஒரே அளவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு 165 அடியை தொட்டது. அணையில் இருந்து தண்ணீர் தமிழக விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மழை குறைந்து வெயில் நிலவி வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வற்றி சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. சோலையாறு அணை தற்போது 160 அடியாக தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1154 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் இருப்பு 3290 கன அடியாக உள்ளது.
மேலும், அணையின் உயரம் 165 அடிக்கு தற்போதைய 160 அடி உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் 1,215 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் ஒரே அளவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.