கோவையில் தென்னிந்திய அளவிலான ஹயாஸிகா கராத்தே சாம்பியன் போட்டி துவக்கம்

ஹயாஸிகா கராத்தே அமைப்பின் தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டி இன்று கோவையில் தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள மிட்லேண்ட் ரெசிடென்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அறங்காவலர் எஸ்.மலர்விழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார்.



இதுகுறித்து ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அறங்காவலர் எஸ்.மலர்விழி கூறியதாவது:-

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விளையாட்டுகளின் பயிற்சிகளில் தினமும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். விளையாட்டுப் போட்டிகள், கராத்தே போன்ற பல விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைப் பருவத்தில் இருந்து பங்கேற்க வேண்டும். உடல் வலிமையே மன வலிமையைக் கொடுக்கும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கராத்தே போன்ற பயிற்சிகள் மிகவும் உதவும்.



உடல் ஆரோக்கியத்தை நாம் பேணிக்காக்க வேண்டும். இப்பயிற்சிகள் நல்ல உடல் வலிமை, ஆரோக்கியம், சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். நமது செயல்களில் திறனை மேம்படுத்த பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், ஜப்பான் ஹயாஸிகா கோவை அமைப்பின் நிர்வாகி மாதம்பட்டி கே.தங்கவேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், வடிவேலம்பாளையம் வி.பி.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



ஜப்பான் ஹயாஸிகா கராத்தே இந்திய அமைப்பின் பொதுசெயலர் சென்செய் எஸ்.ரமேஷ் குமார் வரவேற்புரையாற்றினார். இக்கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் நன்றியுரையாற்றினார்.



இப்போட்டியில், இந்திய அளவில் மொத்தம் 700 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், வெற்றிபெரும் நபர்களுக்கு அகில இந்திய ஜிம்னாஸ்டிக் அமைப்பின் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...