கோவை: வால்பாறையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் உள்ள துர்கா தேவிக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்றன. முன்னதாக கோமாதா பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டது. பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக குண்டத்தில் பக்தர்கள் வழங்கிய வரமிளகாய் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டது. பெண்கள் தேவியை வணங்கி பாடல்கள் பாடினர். தொடர்ந்து, பிரித்திங்கரா தேவி அலங்கரிக்கப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு குங்குமமும் பூவும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் உள்ள துர்கா தேவிக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்றன. முன்னதாக கோமாதா பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டது. பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக குண்டத்தில் பக்தர்கள் வழங்கிய வரமிளகாய் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டது. பெண்கள் தேவியை வணங்கி பாடல்கள் பாடினர். தொடர்ந்து, பிரித்திங்கரா தேவி அலங்கரிக்கப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு குங்குமமும் பூவும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.