கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த இடையூறு செய்ததாக அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது வழக்குபதிவு!

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று சோதனை நடந்த போது இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று சோதனை நடந்த போது இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவரது நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், பலரது வீடுகளிலும் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் எந்த ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என்றும் ஒரே ஒரு பெட்டக சாவி மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடப்பதை அறிந்த கோவை அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டத்திற்கு புறம்பாக கொரோனா தொற்றை பரப்புதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே செல்வராஜ், மகேந்திரன், அமுல் கந்தசாமி, எம்.எஸ்.எம். ஆனந்தன், கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம் மற்றும் ஓ.கே.சின்னராஜ் உட்பட 187 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அதிமுகவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...