100-நாள் வேலைத் திட்டம்: குறைந்த நாட்களுக்கு மட்டுமே பணி வழங்குவதாகக் கூறி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை!

திருப்பூர்: 100-நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்குக் குறைந்த நாட்களுக்கு மட்டுமே பணி வழங்குவதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் மனு கொடுத்து போராட்டம் செய்தனர்.


திருப்பூர்: 100-நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்குக் குறைந்த நாட்களுக்கு மட்டுமே பணி வழங்குவதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் மனு கொடுத்து போராட்டம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் மாணிக்கா புரம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கா புரம், ராசாகவுண்டம்பாளையம், அம்மா பாளையம் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களில் 100-நாள் வேலைத் திட்டத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், ஒரு சில கிராமங்களில் மட்டும் குறிப்பிட்ட சிலருக்கு 100-நாள் வேலை வழங்குவதாகும் மற்றவர்களுக்கு 10-முதல் 15-நாட்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பஞ்சலிங்கம் தலைமையில், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட 100-நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் தங்களுக்குப் பாரபட்சமின்றி தங்களுக்கு 100-நாட்களும் முழுமையாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷிடம் இது தொடர்பான மனு ஒன்றை அளித்தனர். பல்லடம் அருகே 100-நாள் வேலைத் திட்டத்தில் அனைத்து நாட்களும் வேலை தர வேண்டும் என்று பல்லடம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...