மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு

சேலம் மாவட்டம், தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்(28), தந்தை கந்தசாமி – விவசாயி மற்றும் தாயார் சரோஜா அவர்களுடன் வசித்து வந்தார். வெங்கடாசலம் கடந்த 7-ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பூரில் உள்ள அவர் வேலை செய்யும் பனியன் கம்பெனியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெருந்துறை மெயின் ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடாசலம் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இவர் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை. உடனடியாக அவர் ஈரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 7-ம் தேதி மாலை 5.00 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கே.எம்.சி.எச் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து, தாதாபுரம் பஞ்சாயத்து தலைவர் அரசி மாதையன் அறிவுரையின்படி, வெங்கடாசலம் குடும்பத்தார், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய கோவையிலுள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு 08.12.16-ம் தேதியன்று கொண்டுவரப்பட்டது.இதன்படி வெங்கடாசலம் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி கூறுகையில்; மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய வெங்கடாசலம் குடும்பத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...